Episodios

  • Thirukkural - வலியறிதல் - 1
    Apr 15 2026

    இன்றைய பகுதுயில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் 48வது அதிகாரமான வலியறிதல்.

    வலியறிதல் என்றால் ஒரு செயலைச் செய்வதற்கான அடிப்படை திறன் அல்லது ஆற்றலைக் குறிக்கும். எந்த ஒரு செயலைத் தொடங்கும் முன் அதைச் செய்வதற்கான திறமை, பலம் மற்றும் எதிரியின் பலம் இது போன்றவற்றை ஆராய்ந்த பின் தொடங்க வேண்டும். ஒரு செயலைத் தொடங்க வேண்டிய அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் இந்த அதிகாரம் எடுத்துக் கூறுகிறது.

    Más Menos
    9 m
  • Thirukkural - தெரிந்து செயல்வகை - 2
    Apr 1 2026

    போன பகுதியில் திருக்குறளின் 47வது அதிகாரமான தெரிந்து செயல்வகையிலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்த்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கலாம்.

    தெரிந்து செயல்வகை என்றால் செய்யப் போகும் செயல்களை ஆராய்ந்து செய்யும் திறனைக் குறிப்பதாகும். செய்யும் செயல் சிறியதோ அல்லது பெரியதோ அதைத் திட்டமிட்டு ஆராய்ச்சி செய்தபின் முயற்சிக்க வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.

    Más Menos
    8 m
  • Thirukkural - தெரிந்து செயல்வகை -1
    Mar 18 2026

    திருக்குறளின் 47வது அதிகாரமான தெரிந்து செயல்வகையிலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்தப் பகுதியில் பார்க்கப்போகிறோம்.

    தெரிந்து செயல்வகை என்றால் செய்யப் போகும் செயல்களை ஆராய்ந்து செய்யும் திறனைக் குறிப்பதாகும். செய்யும் செயல் சிறியதோ அல்லது பெரியதோ அதைத் திட்டமிட்டு ஆராய்ச்சி செய்தபின் முயற்சிக்க வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.

    Más Menos
    8 m
  • Thirukkural - சிற்றினஞ்சேராமை - 2
    Mar 4 2026

    இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கப் போகிறது திருக்குறளின் 46வது அதிகாரமான் சிற்றினஞ்சேராமை.

    இதில் சிற்றினம் இதன் பொருள் நல்ல குணங்கள் இல்லாமல், தீய வழக்கங்கள் உடையவர்களைக் குறிக்கும். நாம் யாரிடம் நட்பாக இருக்கிறோமோ அவரின் குணநலன்கள் நம்முடைய எண்ணங்களைப் பாதிக்கும். தீயவர்களுடைய நட்பு துன்பங்களைத் தரும். இந்த அதிகாரம் தீய குணங்களை உடைய சிற்றின மக்களுடன் சேராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.

    Más Menos
    8 m
  • Thirukkural - சிற்றினஞ்சேராமை - 1
    Feb 18 2026

    இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கப் போகிறது திருக்குறளின் 46வது அதிகாரமான சிற்றினஞ்சேராமை.

    இதில் சிற்றினம் இதன் பொருள் நல்ல குணங்கள் இல்லாமல், தீய வழக்கங்கள் உடையவர்களைக் குறிக்கும். நாம் யாரிடம் நட்பாக இருக்கிறோமோ அவரின் குணநலன்கள் நம்முடைய எண்ணங்களைப் பாதிக்கும். அவர்களுடைய நட்பு துன்பங்களைத் தரும். இந்த அதிகாரம் தீய குணங்களை உடைய சிற்றின மக்களுடன் சேராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.

    Más Menos
    7 m
  • Thirukkural - பெரியாரைத் துணைக்கோடல் - 2
    Feb 4 2026

    திருக்குறளின் பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களை முந்தைய பகுதியில் பார்த்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் பார்ப்போம்.

    வயதில் பெரியவர்களுக்கு வாழ்க்கையில் அனுபவம் அதிகமாக இருக்கும். அவர்கள் அறிவிலும், சிந்தித்து செயல்படுவதிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். தவறுகள் நிகழாவண்ணம் செயல்படுவார்கள். இந்த அதிகாரம் பெரியவர்களின் துணையை நாடுவதால் வரும் பயனையும் அப்படி துணையை நாடாமல் இருப்பதால் வரும் குற்றத்தையும் எடுத்துக் கூறுகிறது.

    Más Menos
    9 m
  • How Parents Help Children Develop Healthy Boundaries - interview with Anu Verma
    Jan 30 2026

    In this episode, Anu Verma, a trauma‑informed coach, explores how parents can respect their child’s choices while setting steady and clear expectations, giving children the confidence they need to advocate for themselves.

    Más Menos
    34 m
  • Thirukkural - பெரியாரைத் துணைக்கோடல் - 1
    Jan 21 2026

    இந்தப் பகுதியில் நாம் பாரக்கப்போவது திருக்குறளின் 45வது அதிகாரமான பெரியாரைத் துணைக்கோடல். வயதில் பெரியவர்களுக்கு வாழ்க்கையில் அனுபவம் அதிகமாக இருக்கும். அவர்கள் அறிவிலும், சிந்தித்து செயல்படுவதிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். தவறுகள் நிகழாவண்ணம் செயல்படுவார்கள். இந்த அதிகாரம் பெரியவர்களின் துணையை நாடுவதால் வரும் பயனையும், அப்படி துணையை நாடாமல் இருப்பதால் வரும் குற்றத்தையும் எடுத்துக் கூறுகிறது.

    Más Menos
    9 m