Episodios

  • பைசாசம்-சொல்வனம்- புனைவுவனம்- பிரம்ம ராக்ஷஸன் -உரையாடல் சரஸ்வதி தியாகராஜன்
    Mar 18 2026

    பைசாசம்-சொல்வனம்- புனைவுவனம்- பிரம்ம ராக்ஷஸன் -உரையாடல் சரஸ்வதி தியாகராஜன்இன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osவடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி, ஒருங்கிணைப்பாளர் : சரஸ்வதி தியாகராஜன்.எழுத்தாளர் பிரம்ம ராக்ஷஸன் இயற்பெயர் A G ஸ்ரீநிவாசன். M.Com, ACS (Inter) படித்து, சென்னையில் ஓர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார். சிறுவயது முதலே நூல்கள் வாசிக்கும் பழக்கம் உடையவர். அவப்போது கட்டுரைகள் கதைகள் இணைய இதழ்களில் எழுதி வருகிறார். திருவாவடுதுறை ஆதீனத்தின் "சித்தாந்த ரத்தினம்" எனும் பட்டம் பெற்றுள்ளார். கதையை வாசிக்க:-https://solvanam.com/2025/08/24/பைசாசம்/

    Más Menos
    24 m
  • ராமையா அரியா-சொல்வனம்-புனைவுவனம-டேனியல்புரம்-சரஸ்வதி தியாகராஜன்-உரையாடல்
    Mar 10 2026

    ராமையா அரியா-சொல்வனம்-புனைவுவனம-டேனியல்புரம்-சரஸ்வதி தியாகராஜன்-உரையாடல்இன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osவடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி, ஒருங்கிணைப்பாளர் : சரஸ்வதி தியாகராஜன்.டேனியல்புரம்” சிறுகதை, தொழிற்சாலை மாசு, அரசு அலட்சியம், நிறுவன லாப நோக்கம், சாதாரண மக்களின் நோய், மரணம் போன்ற சமூகநீதிக் கேள்விகளை மையமாகக் கொண்ட ஒரு நவீன அரசியல்–சமூகக் கதையாக இருக்கிறது. ஒரே நேரத்தில் உண்மை வெளிப்பட வேண்டிய அவசியமும், அதிகாரங்கள் அதை மறைக்கிற விதமும், அதற்குள் சிக்கித் தவிக்கும் சாதாரண குடும்பங்களின் வலியும் கதையில் இடம் பெறுகின்றன. இன்று நம்முடன் இணைய இருப்பவர் இந்த அருமையான கதையை எழுதிய எழுத்தாளர் ராமையா அரியா அவர்கள். ராமையா அரியா திருநெல்வேலிக்காரர். இருபது வயதில் இருந்து எழுதி வருகிறார். கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர். அவருடைய பல சிறுகதைகள், திரைக்கதைகள் மற்றும் குறுநாவல் சொல்வனத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளன.அத்துடன் 2014-ல் அவருடைய ஆங்கில நாவல் "The Exorcism of Satish Kumar, MBA" Westland பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.நகைச்சுவையைப் பிரதானமாக வைத்துக் கதைகள் எழுதுபவராக இருந்தாலும், ஒரு அரசியல் கட்சி மற்றும் தொண்டு நிறுவனத்தில் சில ஆண்டுகள் பணியாற்றியதால் சம காலத்து அரசியல், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றைக் குறித்த விமரிசனம் வைக்கும் அரசியல் திரில்லர்கள் சமீபத்தில் எழுதி வருகிறார். அவற்றில் ஒன்றே டேனியல்புரம் என்னும் இந்தச் சிறுகதை. சமூக வலைத்தளங்களில் நிகழும் வினோதமான இருபட்சவாதம் (polarization) இந்தக் கதையின் அடிப்படை.கதையை வாசிக்க:-https://solvanam.com/2025/02/09/டேனியல்புரம்/

    Más Menos
    32 m
  • சொல்வனம்- புனைவுவனம்: எழுத்தாளர்- கௌதம் நாராயண்- நிழல்களின் ஓலம்- உரையாடல் சரஸ்வதி தியாகராஜன்
    Feb 13 2026

    சொல்வனம்- புனைவுவனம்: எழுத்தாளர்- கௌதம் நாராயண்- நிழல்களின் ஓலம்- உரையாடல் சரஸ்வதி தியாகராஜன்இன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osவடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி, ஒருங்கிணைப்பாளர் : சரஸ்வதி தியாகராஜன்.கௌதம் நாராயணன் அவர்கள் திருநெல்வேலிக்காரர். ஏறத்தாழ பத்தாண்டு காலமாக எழுத்துலகில் உள்ளார். இவர் ஆங்கிலத்தில் சோனியா என்ற ஒரு நாவலும், தமிழில் கறை என்ற நாவலும் வெளியிட்டிருக்கிறார். நிறைய இவரது சிறுகதைகள் பல்வேறு இணைய இதழ்களில் வந்து கொண்டிருக்கின்றன. . எண்ணூறு பக்கங்கள் கொண்ட இவரது நீண்ட நாவல் ஒன்று வெளிவர உள்ளது. திருநெல்வேலியின் பின்னணியில், ஒரு மழைக்கால இரவில் தொடங்கும் இந்தக் கதை, ஆட்டோ ஓட்டுநரான முத்தப்பன் என்பவரின் வாழ்வின் ஒரு பகுதியை நமக்குக் காட்டுகிறது. வெறும் ஒரு பயணத்தைப் பற்றிய கதையாகத் தொடங்கி, மெல்ல மெல்ல மனித மனதின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் வஞ்சம், இழப்பு மற்றும் கடந்த கால நிழல்கள் எழுப்பும் ஓலத்தைப் பற்றிப் பேசுகிறது. அமைதியாகத் தோன்றும் ஒரு வாழ்வின் பின்னால் எவ்வளவு பெரிய கொந்தளிப்புகள் இருக்கக்கூடும் என்பதை இக்கதை வெளிப்படுத்துகிறது.

    Más Menos
    33 m
  • Solvanam Madhurabharathi Nerkanal by Saraswathi Thiagarajan
    Feb 13 2026

    Solvanam Madhurabharathi Nerkanal by Saraswathi Thiagarajanதிரு. மதுரபாரதி (சு. கணபதி) அவர்கள் தமிழ் இலக்கியத்திலும் பத்திரிகையியலும் இணைந்த ஒரு சிறந்த ஆளுமை. சிறுவயதிலேயே திருக்குறள் மற்றும் பாரதியார் கவிதைகள் ஊட்டிய வாசிப்பு பழக்கம், அவரை ஆழ்ந்த இலக்கியப் பயணத்திற்கு அழைத்துச் சென்றது. சிறுகதை, கவிதை, கட்டுரை, இசைப்பாடல், ஆங்கில–தமிழ் இருமொழி எழுத்து என பல வடிவங்களில் அவர் தொடர்ந்து எழுதிவந்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரின் படுகொலை பின்னணியில் எழுதிய ‘தீ’ என்ற சிறுகதை, இலக்கியச் சிந்தனையால் மாதத்தின் சிறந்த சிறுகதையாகத் தேர்வு பெற்றது. British Council மற்றும் The Poetry Society of India இணைந்து நடத்திய அனைத்துலகக் கவிதைப் போட்டியில் “The Making of a God” என்ற ஆங்கிலக் கவிதைக்கு இரண்டாம் பரிசு பெற்றது அவரது சர்வதேச இலக்கிய அங்கீகாரமாகும். The Hindustan Times நாளிதழில் வெளிவந்த நகைச்சுவைக் கட்டுரைகள், அவரது மொழி நயத்தையும் சமூகக் கூர்மையையும் வெளிப்படுத்துகின்றன. கல்கி மாத இதழின் இசைப்பாடல் போட்டியில் ‘இன்னும் உறங்காதே’ பாடல் முதல் பரிசு பெற்றது அவரது கலைவெளியின் மற்றொரு முக்கிய மைல்கல்லாகும். ‘மரத்தடி’, ‘அகத்தியர்’ போன்ற இணைய இலக்கிய மன்றங்களின் வழியாக உலகத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பரவலாக அறியப்பட்டவர். ‘ரமண சரிதம்’, ‘புத்தம் சரணம்’, ‘சீக்கிய மதம்’ போன்ற நூல்கள் தமிழில் மத–தத்துவ இலக்கியத்திற்கு முக்கிய பங்களிப்பாக அமைந்துள்ளன. இருபதாண்டுகளுக்கும் மேலாக ‘தென்றல்’ இதழின் ஆசிரியர் மற்றும் முதன்மை ஆசிரியராகப் பணியாற்றி, சமகாலத் தமிழ் இலக்கியத்திற்கு தொடர்ந்து வழிகாட்டி வருகிறார்தற்போது இவைகளில் தனது நேரத்தைத் தந்து வருகிறார். 1. Chief Editor, THENDRAL2. State Spiritual Coordinator, Sri Sathya Sai Seva Organizations (Tamil Nadu – South)3. Editor – Sanathana Sarathi (Tami)4. Trustee, Sri Sathya Sai Books and Publications, Tamil Nadu.

    Más Menos
    1 h y 42 m
  • சொல்வனம்- புனைவுவனம்: எழுத்தாளர்- (Saju)சஜு- மரணப் புன்னகை - உரையாடல் சரஸ்வதி தியாகராஜன்
    Feb 5 2026

    சொல்வனம்- புனைவுவனம்: எழுத்தாளர்- (Saju)சஜு- மரணப் புன்னகை - உரையாடல் சரஸ்வதி தியாகராஜன்ஸஜு கிராமியக் கலை, கவிதை, ஆய்வு ஆகிய மூன்றையும்இணைத்துப் பயணிக்கும் ஒருவர்.கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி ஊரைச் சேர்ந்தவர்.பொறியியல் பட்டம் பெற்றிருந்தாலும்,சிறுவயதிலிருந்தே கிராமியக் கலை மீது கொண்ட ஆழ்ந்த ஆர்வம்அவரை செண்டை மேளக் கலையுடன் வாழச் செய்கிறது. கவிதை மீது கொண்ட ஈர்ப்பு,“துமிதங்”, “நீரருந்தும் நதி” போன்ற கவிதைத் தொகுப்புகளாகவாசகர்களை அடைந்தது.செண்டை மேளக் கலைவாழ்க்கையை“கொட்டடிக்காரன்” என்ற நூலாக ஆவணப்படுத்தி,ஒரு கலைஞனின் வாழ்வை இலக்கியமாக மாற்றியவர் இவர்.“ஆற்றுமாடன் தம்புரான்” என்றநாட்டாரியல் ஆய்வு நூல் தனித்த கவனத்தைப் பெற்றார். இவர், தெய்வக்கலை பற்றி எழுதிய ஆய்வு நூல் “தெய்யத்தின் முகங்கள்”விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருதைப் பெற்றுத் தந்துள்ளது. மனிதர்களின் புன்னகையையும், மரணத்தின் புன்னகையையும் ஒரே சமயத்தில் சுமக்கும் ஒரு நினைவுக் களஞ்சியம் இந்தக் கதைகதையை வாசிக்க:-https://solvanam.com/2025/12/14/மரணப்-புன்னகை/

    Más Menos
    24 m
  • Solvanam- Thendral மதுரபாரதி Nerkanal by Saraswathi Thiagarajan
    Feb 5 2026

    திரு. மதுரபாரதி (சு. கணபதி) அவர்கள் தமிழ் இலக்கியத்திலும் பத்திரிகையியலும் இணைந்த ஒரு சிறந்த ஆளுமை. சிறுவயதிலேயே திருக்குறள் மற்றும் பாரதியார் கவிதைகள் ஊட்டிய வாசிப்பு பழக்கம், அவரை ஆழ்ந்த இலக்கியப் பயணத்திற்கு அழைத்துச் சென்றது. சிறுகதை, கவிதை, கட்டுரை, இசைப்பாடல், ஆங்கில–தமிழ் இருமொழி எழுத்து என பல வடிவங்களில் அவர் தொடர்ந்து எழுதிவந்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரின் படுகொலை பின்னணியில் எழுதிய ‘தீ’ என்ற சிறுகதை, இலக்கியச் சிந்தனையால் மாதத்தின் சிறந்த சிறுகதையாகத் தேர்வு பெற்றது. British Council மற்றும் The Poetry Society of India இணைந்து நடத்திய அனைத்துலகக் கவிதைப் போட்டியில் “The Making of a God” என்ற ஆங்கிலக் கவிதைக்கு இரண்டாம் பரிசு பெற்றது அவரது சர்வதேச இலக்கிய அங்கீகாரமாகும். The Hindustan Times நாளிதழில் வெளிவந்த நகைச்சுவைக் கட்டுரைகள், அவரது மொழி நயத்தையும் சமூகக் கூர்மையையும் வெளிப்படுத்துகின்றன. கல்கி மாத இதழின் இசைப்பாடல் போட்டியில் ‘இன்னும் உறங்காதே’ பாடல் முதல் பரிசு பெற்றது அவரது கலைவெளியின் மற்றொரு முக்கிய மைல்கல்லாகும். ‘மரத்தடி’, ‘அகத்தியர்’ போன்ற இணைய இலக்கிய மன்றங்களின் வழியாக உலகத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பரவலாக அறியப்பட்டவர். ‘ரமண சரிதம்’, ‘புத்தம் சரணம்’, ‘சீக்கிய மதம்’ போன்ற நூல்கள் தமிழில் மத–தத்துவ இலக்கியத்திற்கு முக்கிய பங்களிப்பாக அமைந்துள்ளன. இருபதாண்டுகளுக்கும் மேலாக ‘தென்றல்’ இதழின் ஆசிரியர் மற்றும் முதன்மை ஆசிரியராகப் பணியாற்றி, சமகாலத் தமிழ் இலக்கியத்திற்கு தொடர்ந்து வழிகாட்டி வருகிறார்தற்போது இவைகளில் தனது நேரத்தைத் தந்து வருகிறார். 1. Chief Editor, THENDRAL2. State Spiritual Coordinator, Sri Sathya Sai Seva Organizations (Tamil Nadu – South)3. Editor – Sanathana Sarathi (Tami)4. Trustee, Sri Sathya Sai Books and Publications, Tamil Nadu.

    Más Menos
    24 m
  • சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- ஷைலஜா - மதியொன்றில்லை..- சரஸ்வதி தியாகராஜன்
    Jan 4 2026

    எழுத்தாளர் அமரர் ஏ. எஸ். ராகவனின் மகளான மைதிலி நாராயணனின்

    புனைபெயர் ஷைலஜா. இவர்

    400 சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள், 5 கட்டுரைகள் ,12 வானொலிநாடகங்கள், 3 தொலைக்காட்சி நாடகங்கள், கவிதைகள் என்று எழுதிவருவதுடன் கோலம், சமையல், பாட்டு, விளம்பரத்தில் குறும்படத்தில் பின்னணிக் குரல் கொடுப்பதுமாக மிளிர்கிறார்.

    திருப்பாவை உபன்யாசம் செய்து வருகிறார்.

    பாரதி விழாவின் போது நாடகத்தில் நடித்து பெங்களூரில் சிறந்த நடிகைக்கான விருது பெற்றவர்.

    அமரர் ரங்கநாயகி அம்மாள் நினைவு நாவல் போட்டியில் இவர் எழுதிய 'திக்குத் தெரியாத காட்டில்' என்னும் நாவலுக்கு முதற் பரிசு கிடைத்துள்ளது.

    இவற்றிற்கு மேல் ஒரு கலகலப்பான இல்லத்தரசி


    மதியொன்றில்லை” என்ற இந்தக் கதை,

    வெறும் பக்திக் கதையோ,

    நகர–கிராம முரண்பாட்டுக் கதையோ அல்ல.

    இது ஒரு சொல்லின் பொறுப்பைப் பற்றிய கதை.

    ஒரு இளம் வயதில் சொன்ன ஒரு வாக்கியம்,

    இன்னொருவரின் வாழ்வையே திசைமாற்றியிருக்கும் போது

    அந்த வாக்கியத்தைச் சொன்னவன்

    அதன் ஆழத்தை உணர்ந்த தருணமே இந்தக் கதை.

    கதையை வாசிக்க:-https://solvanam.com/2025/08/10/மதியொன்றில்லை/


    Más Menos
    21 m
  • சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- எஸ்ஸார்சி - மனசுப் போல - சரஸ்வதி தியாகராஜன்
    Dec 28 2025

    சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- எஸ்ஸார்சி - மனசுப் போல - சரஸ்வதி தியாகராஜன்

    யூடியுப்: https://youtube.com/@thamils

    இன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/

    வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9os

    வடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்

    காணொளி, ஒருங்கிணைப்பாளர் : சரஸ்வதி தியாகராஜன்.


    எழுத்தாளர் எஸ்ஸார்சி என்கிற எஸ். ராமச்சந்திரன் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமற்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். இவர் எட்டையபுரம் பாரதி பிறந்த நாள் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, பாரத மாநில வங்கி இலக்கிய விருது போன்றவைகளையும் பெற்றிருக்கிறார். இவரது புதினம் ‘ கனவு மெய்ப்படும்’


    திருப்பூர், எட்டயபுரம், மாநில வங்கி,, என் எல் சி நிறுவன விருது என நான்கு பரிசுகள் பெற்றது. ‘நெருப்புக்கு ஏது உறக்கம்.’ என்னும் புதினம் தமிழ அரசின்

    பரிசும் , சேலம் தாரையார் விருதும் பெற்றது.


    ஆங்கில இலக்கித்திலும் ஈடுபாடு உடைய இவர் ‘ரெயின் போ’ என்னும் கவிதை நூலையும், ‘பேகனும் திருவள்ளுவரும்’ ஒப்பீட்டு நூலையும் எழுதினார்.

    ” மனசுப் போல” என்ற இவர்

    கதை ஒரு குடும்பப் பயணம், ** எதிர்பாராத விபத்து**, மற்றும் வீட்டுச் சாவி தொலைந்த பதற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஒரு நடுத்தரக் குடும்பத்தின் யதார்த்தமான அனுபவங்களை நகைச்சுவை கலந்த நடையில் விவரிக்கிறது.


    நடுத்தர வர்க்கத்தின் எளிய ஆசைகளையும், மனிதத் திட்டமிடல்களுக்கு அப்பாற்பட்ட வாழ்வின் எதார்த்தத்தையும் அழகாகப் பிரதிபலிக்கிறது. பத்து ரூபாய்க்குப் பேரம் பேசுபவர்கள் நெருக்கடி நேரத்தில் தாராளம் காட்டுவது போன்ற மனித முரண்களையும், தொலைந்த சாவி மீண்டும் கிடைப்பது போன்ற விதியின் விளையாட்டையும்இக்கதை நுணுக்கமாகப் பேசுகிறது. வட்டார மணமும் கலகலப்பான நடையும் கொண்ட இப்படைப்பு, வாழ்வின் சோதனைகளுக்கு இடையில் 'அனைத்தும் நன்மையில் முடியும்' என்ற நம்பிக்கையை நமக்குத் தருகிறது

    Más Menos
    1 m