ராமையா அரியா-சொல்வனம்-புனைவுவனம-டேனியல்புரம்-சரஸ்வதி தியாகராஜன்-உரையாடல் Podcast Por  arte de portada

ராமையா அரியா-சொல்வனம்-புனைவுவனம-டேனியல்புரம்-சரஸ்வதி தியாகராஜன்-உரையாடல்

ராமையா அரியா-சொல்வனம்-புனைவுவனம-டேனியல்புரம்-சரஸ்வதி தியாகராஜன்-உரையாடல்

Escúchala gratis

Ver detalles del espectáculo

ராமையா அரியா-சொல்வனம்-புனைவுவனம-டேனியல்புரம்-சரஸ்வதி தியாகராஜன்-உரையாடல்இன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osவடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி, ஒருங்கிணைப்பாளர் : சரஸ்வதி தியாகராஜன்.டேனியல்புரம்” சிறுகதை, தொழிற்சாலை மாசு, அரசு அலட்சியம், நிறுவன லாப நோக்கம், சாதாரண மக்களின் நோய், மரணம் போன்ற சமூகநீதிக் கேள்விகளை மையமாகக் கொண்ட ஒரு நவீன அரசியல்–சமூகக் கதையாக இருக்கிறது. ஒரே நேரத்தில் உண்மை வெளிப்பட வேண்டிய அவசியமும், அதிகாரங்கள் அதை மறைக்கிற விதமும், அதற்குள் சிக்கித் தவிக்கும் சாதாரண குடும்பங்களின் வலியும் கதையில் இடம் பெறுகின்றன. இன்று நம்முடன் இணைய இருப்பவர் இந்த அருமையான கதையை எழுதிய எழுத்தாளர் ராமையா அரியா அவர்கள். ராமையா அரியா திருநெல்வேலிக்காரர். இருபது வயதில் இருந்து எழுதி வருகிறார். கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர். அவருடைய பல சிறுகதைகள், திரைக்கதைகள் மற்றும் குறுநாவல் சொல்வனத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளன.அத்துடன் 2014-ல் அவருடைய ஆங்கில நாவல் "The Exorcism of Satish Kumar, MBA" Westland பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.நகைச்சுவையைப் பிரதானமாக வைத்துக் கதைகள் எழுதுபவராக இருந்தாலும், ஒரு அரசியல் கட்சி மற்றும் தொண்டு நிறுவனத்தில் சில ஆண்டுகள் பணியாற்றியதால் சம காலத்து அரசியல், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றைக் குறித்த விமரிசனம் வைக்கும் அரசியல் திரில்லர்கள் சமீபத்தில் எழுதி வருகிறார். அவற்றில் ஒன்றே டேனியல்புரம் என்னும் இந்தச் சிறுகதை. சமூக வலைத்தளங்களில் நிகழும் வினோதமான இருபட்சவாதம் (polarization) இந்தக் கதையின் அடிப்படை.கதையை வாசிக்க:-https://solvanam.com/2025/02/09/டேனியல்புரம்/

Todavía no hay opiniones